ஊராட்சி தலைவர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு திறன் பயிற்சி முகாம்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 6: சமூக பாதுகாப்பு துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் திருத்துறைப்பூண்டிஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 32 ஊராட்சி தலைவர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு திறன் வளர்ச்சி பயிற்சி முகாம் நடைபெற்ளது. ஒன்றிய ஆணையர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆற்றுப்படுத்துனர் சவீதா, சமூக பணியாளர் அபிராமி ஆகியோர் குழந்தைகள் பாதுகாப்பு, அவர்களை பிரச்சினைகளில் இருந்து எப்படி பாதுகாப்பது என்பது குறித்து ஆலோசனை வழங்கினர். இதில் 32 ஊராட்சி தலைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: