திருத்துறைப்பூண்டி, மார்ச் 6: திருத்துறைப்பூண்டியில் நீதிமன்ற ஊழியர்களை இரவு 9 மணி வரை பணிபுரிய நிர்ப்பந்திக்கப்படுவதை கைவிடக்கோரி உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் கோரிக்கைகளை வலியுறுத்தி மதியம் உணவருந்தாமல் பணி புரிந்து வரும் காந்திய வழி போராட்டம் நடந்தது. நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற உண்ணாநிலை போராட்டத்தில்உயர்நீதி மன்ற சுற்றறிக்கைக்கு முரணாக திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஊழியர்களை இரவு 9 மணி வரை பணிபுரிய நிர்பந்திக்கப்படுவதை கைவிட்டு அலுவலக பணி நேரம் முடிந்ததும் வீட்டிற்கு செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.