டியூசனுக்கு சென்ற மாணவர் மாயம்

திருச்சி, மார்ச் 6: முசிறியை சேர்ந்தவர் குணசேகரன், ராணுவ வீரர். இவரது மகன் சசிகுமார்(15). இவர் எடமலைப்பட்டிபுதுரில் உள்ள பாட்டி பசுபதம் வீட்டில் தங்கி, கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 29ம் தேதி பள்ளியில், சசிகுமாருக்கும், சக மாணவர்கள் சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. இது தெரிய வந்ததும் பள்ளி ஆசிரியர் சசிகுமாரை கண்டித்து 2ம் தேதி பள்ளிக்கு வரும்போது பெற்றோரை அழைத்து வர வேண்டும் என்று கூறினார். ஆனால் சசிகுமார் வீட்டுக்கு வந்து எதுவும் சொல்லவில்லை. இதில் 1ம் தேதி மாலை சசிகுமார் கே.ஆர்.எஸ். நகருக்கு டியூசன் படிக்க சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி பாட்டி பசுபதம் எடமலைப்பட்டிபுதூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நிக்சன் வழக்குப்பதிந்து மாயமான சசிகுமாரை தேடி வருகிறார்.

Related Stories: