காடையாம்பட்டி, மார்ச் 6: விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் எடுக்கும் பணிக்காக அளவீட்டிற்காக சென்ற அதிகாரிகள் குழுவிற்கு எதிர்ப்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் விமான நிலையம் விரிவாக்கத்திற்காக காமலாபுரம், பொட்டியபுரம், தும்பிப்பாடி, சிக்கனம்பட்டி கிராமங்களிலிருந்து சுமார் 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்து கையகப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து ஒவ்வொரு கட்டமாக நிலம் எடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து நிலம் எடுப்பு தனி தாசில்தார்கள், நிலம் அளவையர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் நேற்று தும்பிப்பாடி கிராமத்திற்கு நிலம் அளவை பணிக்காக சென்றனர்.