தண்டையார்பேட்டை: போராட்டம் நடத்துபவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் எச்சரித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வண்ணாரப்பேட்டை நேதாஜி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போராட்டக்காரர்கள் மீது போலீசார் சார்பில் தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாகவும், இதுபற்றி சிலர் அதிகளவில் நட்பு வட்டாரத்தில் பகிர்ந்தும் வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் கூறுகையில், ‘‘பல்வேறு பகுதியில் நடைபெறும் போராட்டங்களுக்கு போலீசார் முழு பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்.