மாமல்லபுரம், மார்ச் 6: மாமல்லபுரம் வேதாசலம் நகரில், வாகனங்கள் செல்ல முடியாத அளவில் சாலையின் நடுவில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்ட மின் இணைப்பு பெட்டியை உடனடியாக அகற்றி, வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.மாமல்லபுரம் நகரம் முழுவதும் மின் கம்பங்களை அகற்றிவிட்டு, தரை வழியாக கேபிள் வயர்கள் புதைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளுக்கும் மின் இணைப்பு வழங்க தெருக்களில் மின் இணைப்பு பெட்டிகள் அமைக்கப்படுகின்றன.இந்நிலையில், மாமல்லபுரம் வேதாசலம் நகர் 3வது தெருவில் மின் இணைப்பு பெட்டி அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தெரு மிக குறுகியதாக உள்ளது. இந்த தெரு முனையில் அமைக்கப்பட்ட மின் இணைப்பு பெட்டி தெருவை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளது.