மதுரை, மார்ச் 5: தமிழில் பெயர் பலகை அமைக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் மதுரையில் நடந்தது. தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் விசயராகவன் தலைமையில் பள்ளி மாணவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். கடைகள், தொழிற்சாலைகள், பன்னாட்டு வணிக நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பெயர்ப்பலகைகள் தமிழில் அமைய வேண்டும் என்ற பெயர் பலகைகளை மாணவர்கள் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். தமிழ் சங்க கட்டிடம் முன்பு துவங்கிய ஊர்வலம், கேகேநகர், ஆவின் சந்திப்பு, காந்திமியூசியம் வழியாக திரும்பவும் தமிழ்சங்க கட்டிடத்தை அடைந்தது. இந்த ஊர்வலத்தில் அதிகாரிகள், சிறுவர்களான பள்ளி மாணவர்களை அழைத்து வந்து நடக்க வைத்திருப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.