புதுக்கோட்டை, மார்ச்5: தமிழகத்திலேயே மிகப் பெரிய இரண்டாவது அரசு அருங்காட்சியகம் புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம். இங்கு பல்வேறு விதமான பாம்புகள், பறவைகள், விலங்கினங்கள், உள்ளிட்டவைகளும் பழங்கால முதுமக்கள் தாழிகளில் மன்னர்கள் உபபோகித்த ஆயுதங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் அரசு அருங்காட்சியகத்தில் பாம்புகள் புகைப்பட கண்காட்சி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகத்தில் கொடிய விஷமுள்ள பாம்பு வகைகள் புகைப்படங்களை கண்காட்சியில் வைத்துள்ளனர். மேலும் அருங்காட்சியகத்தில் பாடம் செய்து வைத்துள்ள நிஜ பாம்புகள் ஆகியவையும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.