நாகை,மார்ச்5: வேளாங்கண்ணி அருகே திருடிய சிலையை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான அம்மன் சிலை உள்ளிட்ட பொருட்கள் போலீசார் மீட்டனர். நாகை மாவட்டடம் வேளாங்கண்ணி அருகே சின்னதம்பூரில் செல்லமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோயிலில் இருந்த மூன்றரை அடி உயரம் கொண்ட உற்சவர் செப்பு சிலை, இரண்டு கவரிங் ஆரம், 5 குத்து விளக்குகள், 6 சொம்புகள், ஒரு கைவிளக்கு ஆகியவை கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம் தேதி மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் நாகை எஸ்பி செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.