காரைக்கால், மார்ச்5: புதுச்சேரி விளையாட்டு மற்றும் கலாசார விழாவில் சிறப்பிடம் பெற்ற, காரைக்கால் அண்ணா அரசு கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. புதுச்சேரி அரசு சார்பில், அண்மையில் விளையாட்டு மற்றும் கலாசார விழா சிறப்பாக நடத்தப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர், இந்த விழாவில், பங்கேற்று பல பதக்கங்களை வென்றனர். இவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.