குடியாத்தம், மார்ச் 5: குடியாத்தம் வனப்பகுதியில் இறந்த ஒற்றை யானையை தேடி வந்த யானைகளின் அட்டகாசத்தால் அப்பகுதி கிராம மக்கள் இரவில் தூக்கத்தை தொலைத்தனர்.கிருஷ்ணகிரி வனப்பகுதியில் இருந்து கடந்த மாதம் 30க்கும் மேற்பட்ட யானைகள் வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனப்பகுதியில் நுழைந்தது. வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் யானைக் கூட்டங்கள் 2 பிரிவாக பிரிந்து இங்குள்ள பயிர்களை சேதப்படுத்தி வந்தது.பின்னர், குடியாத்தம் வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், ஒலி எழுப்பியும் யானைக்கூட்டத்தை விரட்டி அடித்தனர். அதன்பிறகு இப்பகுதியில் ஒற்றை யானை மட்டும் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்தது. இந்நிலையில், கடந்த 2ம் தேதி இந்த மின்வேலியில் சிக்கி ஒற்றை யானை இறந்தது.