கோஷ்டி தகராறு ஒருவர் கைது

பெரியகுளம், மார்ச் 4: பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டி கூர்மையா கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (45). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ராமச்சந்திரனுக்கும் இடையே இடம் தொடர்பாக பிரச்னை இருந்தது. இந்நிலையில், ராமச்சந்திரன், அவரது மனைவி ஜோதிமணி இருவரும் சேர்ந்து நேற்று முன்தினம் செல்வத்தை அவதூறாக பேசி அரிவாளால் வெட்டி தாக்கினர்.

மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதேபோல செல்வம் அவரது மனைவி பஞ்சவர்ணம், உறவினர்கள் சுப்பம்மாள், லட்சுமி ஆகியோர் சேர்ந்து ராமச்சந்திரனை கம்பால் தாக்கி கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின்பேரில், தென்கரை போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து, ராமச்சந்திரனை கைது செய்தனர்; மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: