தொழிலாளியை தாக்கிய ஜவுளிக்கடை உரிமையாளர் மீது வழக்கு

போடி, மே 4: தேனி மாவட்டம், போடி சுந்தரபாண்டியன் தெருவை சேர்ந்தவர் ரத்னவேல் பாண்டியன் (38). போடி திருமலாபுரம் சொக்கன் தோட்டத்தைச் சேர்ந்தவர் முரளி. ஜவுளிக்கடை உரிமையாளர். இவரது கடையில் ரத்னவேல் பாண்டியன் வேலை செய்து வருகிறார். 2 தினங்களுக்கு முன்பு முரளிக்கு சொந்தமான டூவீவலரில் சென்ற ரத்னவேல் பாண்டியன் வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை ஜவுளி கடைக்கு டூவீலருடன் ரத்தினவேல் பாண்டியன் வந்துள்ளார்.

அங்கு கடையிலிருந்த முரளி, 2 நாட்களாக டூவீலருடன் எங்கு சென்றாய் என ரத்னவேல் பாண்டியனை ஆபாசமாக பேசியதுடன், கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ரத்னவேல் பாண்டியன் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ரத்னவேல் பாண்டியன் புகாரின்பேரில் முரளி மீது போடி நகர் காவல் நிலைய எஸ்ஐ மணிகண்டன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post தொழிலாளியை தாக்கிய ஜவுளிக்கடை உரிமையாளர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: