டெல்லி வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை, பிப். 4: டெல்லியில் நடந்த வன்முறை தாக்குதலை கண்டித்து, மதுரை மாவட்ட இடதுசாரிகள் சார்பில் நேற்று முனிச்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பகுதி குழு செயலாளர் லெனின் தலைமை வகித்தார்.

மாநகர் மாவட்ட செயலாளர் விஜயராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சரவணன், எஸ்.யூ.சி.ஐ. மாவட்ட செயலாளர் வால்டர், சிபிஐ (எம்.எல்) மாவட்ட செயலாளர் மதிவாணன் ஆகியோர் பேசினர். இதில் இடது சாரிகள் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: