சுகாதார மைய மேற்கூரை சரிந்தது, மூதாட்டி படுகாயம்

 

மதுரை, மே 4: மதுரை மாநகராட்சி துணை சுகாதார மையத்திற்கு வந்த மூதாட்டி, அங்கிருந்த மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் படுகாயமடைந்தார். மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விமலா. இவர்களுக்கு, 2 வயது மற்றும் 2 மாத பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் விமலாவின் தாயார் போதுமணி (57), மதுரை நரிமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனது பேத்திகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக நேற்று முன்தினம் அழைத்துச்சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக சுகாதார நிலையத்தின் மேற்கூரை பெயர்ந்து போதுமணி மீது விழுந்தது. இதில் அவர் காயமடைந்தார். இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்கூரை பெயர்ந்து விழுந்தபோது அவருடன் இருந்த இரு குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.

The post சுகாதார மைய மேற்கூரை சரிந்தது, மூதாட்டி படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: