கோடைகால கலை பயிற்சி முகாம் நாளை தொடக்கம்

 

மதுரை, மே 4: மதுரையில் பள்ளி மாணவ, மாணவியருக்கான கோடைகால கலை பயிற்சி முகாம் நாளை (மே 5) தொடங்குகிறது. தமிழக கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் மதுரை மண்டல கலை பண்பாட்டு மையம் மற்றும் சவகர் சிறுவர் மன்றத்தின் சார்பில், கோடைகால கலை பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இதில் ஓவியம், பரதம், பாட்டு மற்றும் சிலம்பம் ஆகியவை தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

மதுரை கோ.புதூர் பகுதியில் உள்ள பாரதி வீதி உலா ரோட்டில் உள்ள மண்டல கலைப்பண்பாட்டு மையத்தில் நாளை (மே 5) முதல் 14ம் தேதி வரை இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இதன்படி தினசரி மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடக்கும் பயிற்சி முகாமில் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். இதில் கலந்து கொள்ள விரும்புவோர் கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள 98425 96563 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

The post கோடைகால கலை பயிற்சி முகாம் நாளை தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: