சிலிண்டர் வினியோகிப்போர் சங்க ஆலோசனை கூட்டம்

பள்ளிபாளையம், மார்ச் 3: பள்ளிபாளையத்தில் கேஸ் சிலிண்டர் வினியோகிப்போர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு எல்ஜிபி சிலிண்டர்  வினியோகிக்கும் தொழிற்சங்கத்தின் ஆலோனை கூட்டம், பள்ளிபாளையம் சமுதாய  கூடத்தில் நடைபெற்றது. சங்கத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கி  பேசினார். மாநில இணைச்செயலாளர் பரமசிவம் மற்றும் ஈரோடு, திருப்பூர், சேலம்  மாவட்ட சங்கத்தின் தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள்  கூட்டத்தில் பங்கேற்றனர். கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்கு, ஏஜென்ஸி வழங்க வேண்டிய சம்பளம், ஈஎஸ்ஐ, பிஎஃப் உள்ளிட்ட சலுகைகளை முறையாக  தாமதமின்றி வழங்க வேண்டும். அடிப்படை வசதிகளை வழங்கி, பணி பாதுகாப்பு நடவடிக்கைளை  மேற்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மாவட்ட  செயலாளர் பூபதிராஜா நன்றி கூறினார்.

Related Stories: