கொள்ளிடம், மார்ச் 3: கொள்ளிடம் அருகே பஸ் இயக்கப்படாததை கண்டித்து மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை மாவட்டம் சீர்காழியிலிருந்து உமையாள்பதி, மாதானம், ஆளாளசுந்தரம், ஆச்சாள்புரம், கொள்ளிடம் வழியாக சிதம்பரத்துக்கு கடந்த 2 வருடத்திற்கு முன் 5 முறை அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. அதன் பின் இந்த வழித்தடங்களில் அரசு டவுன் பஸ் 2 முறையாக குறைக்கப்பட்டது. இது குறித்து இப்பகுதி மக்களின் சார்பாக கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டன. அந்த கோரிக்கையை ஏற்று கடந்த 27.8.19 அன்று சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் ஒரு நாளைக்கு மீண்டும் 5 முறை இதே வழித்தடங்களில் பஸ் இயக்க சீர்காழி அரசு போக்குவரத்து கழக மேலாளர் மற்றும் தாசில்தார் உறுதி அளி்த்தனர்.