சீல் வைப்பு சம்பவம் எதிரொலி கேன் குடிநீர் முகவர்கள் ஆட்சியரிடம் மனு

கடலூர், மார்ச் 3:   கடலூர் மாவட்டத்தில் அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு சீல் வைக்கப்படும் நிலையில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட குடிநீர் விற்பனை முகவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு வழங்கினர்.

இதேபோல் கடலூர் மாவட்டத்தில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனையாளர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனை சந்தித்து மனு வழங்கினர். மனுவில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் குடிநீர் விற்பனை செய்து வருகிறோம். தற்போது அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே எங்களது நலன் கருதி கேன் குடிநீர் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கேன் குடிநீர் விற்பனை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

Related Stories: