கலசலிங்கம் பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

திருவில்லிபுத்தூர், மார்ச் 2: திருவில்லிபுத்தூர் அருகே உள்ள கலசலிங்கம் பாலிடெக்னிக் கல்லூரியில் 1984 -87ம் ஆண்டு பேட்ச் மாணவர்கள் சந்திப்பு விழா இயக்குனர் சசி ஆனந்த் தலைமையில் நடை பெற்றது. கல்லூரி முதல்வர் கருணாநிதி நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். மாணவர்கள் சிவகுமார், முத்துக்குமார், ரவீந்திரன் மதிவாணன், ரவிராஜ், பால்ராஜ் ஆகியோர் ஒருங்கிணைந்து 1984 -87ம் ஆண்டில் சிவில், மெக்கானிக்கல், இசிஇ படித்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழகம் முழுவதிலும் இருந்து கலந்து கொண்டனர்.

விழாவில் மாணவர்களுக்கு ஆசிரியர்களாக இருந்த கற்பஞானியார், குமார், தனலட்சுமி, சிவகாமி, குளோரின், ராஜாமணி , சங்கர சுப்ரமணியம் ,கருப்பசாமி ஆகியோர் பழைய மாணவர்கள் கவுரவப்படுத்தி பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினர். பழைய மாணவர்கள் 33 வருடங்களுக்கு பின் தாங்கள் படித்த வகுப்புகளுக்குச் சென்று சக மாணவர்களுடன் சந்தித்து பேசி நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். மாணவர்கள் சந்திப்பு நினைவாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பாலிடெக்னிக் கல்லூரி மு கருணாநிதி நன்றி தெரிவித்தார்.

Related Stories: