பெரியகுளம், மார்ச் 2: பெரியகுளம் ‘டிரயம்ப்’ நடுநிலைப்பள்ளியில் தேசீய அறிவியல் தினத்தை முன்னிட்டு, அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சியினை பெரியகுளம் வட்டாரக்கல்வி அலுவலர் தேவி திறந்து வைத்தார். பின்னர், கண்காட்சியை பார்வையிட்டு மாணவ, மாணவியரை பாராட்டி பேசினார். ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்று பேசினார். பள்ளிச் செயலர் ராம்சங்கர் தேசிய அறிவியல் தினம், அறிவியல் மனப்பான்மை, அறிவியல் தினம் கொண்டாடுவதன் அவசியம் ஆகியவை குறித்து உரையாற்றினார்.