திருச்செங்கோட்டில் ₹12 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

திருச்செங்கோடு, மார்ச் 2:  திருச்செங்கோட்டில் நடைபெற்ற ஏலத்தில் 500 மூட்டை மஞ்சள் ₹12 லட்சத்திற்கு விற்பனையானது. திருச்செங்கோடு வேளாண்  உற்பத்தியாளர்கள்  கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில்,  நேற்று மஞ்சள் ஏலம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, அண்டைய மாவட்டங்களான சேலம், ஈரோடு மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், மஞ்சள் மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்து குவித்தனர். மொத்தம் 500 மூடடை மஞ்சள் ஏலத்திற்கு வந்தது. விரலி  ரகம் குவிண்டால் ₹6723 முதல் ₹7602  வரையிலும் விற்பனையானது. கிழங்கு ரகம் ₹6369 முதல் ₹6779 வரையிலும், பனங்காளி ₹8802 முதல் ₹12919 வரையிலும் ஏலம் போனது. ஆகமொத்தம் 500 மூட்டை மஞ்சள் ₹12 லட்சத்திற்கு விற்பனையானது.

Related Stories: