நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் நிதியளிப்பு கூட்டம்

நீடாமங்கலம், மார்ச் 1: நீடாமங்கலம் ஒன்றிய, நகர, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு கூட்டம் பெரியார் சிலை அருகில் ஒன்றிய செயலாளர் தமிழார்வன் தலைமையில் நடந்தது.  நகர செயலாள் பாரதிமோகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினரும், நாகை நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜ், திருவாரூர் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், மாநில நிர்வாகக்குழு செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ஞானமோகன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பேசினர். நிதியளிப்பு கூட்டத்தில் நீடாமங்கலம் ஒன்றியம் சார்பில் ரூ.3.21 லட்சம் நிதி அளிக்கப்பட்டது. திருச்சி பாரதி கலைக்குழுவின் மாத்தியோசி கலை நிகழ்ச்சி நடந்தது.

Related Stories: