தி.பூண்டி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுகட்ட அடிக்கல் நாட்டு விழா

திருத்துறைப்பூண்டி, மார்ச் 1: திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அவசர கால சிகிச்சை பிரிவு புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்எல்ஏ ஆடலரசன்,. முன்னாள் எம்எல்ஏ ராஜன், முன்னாள் பேரூராட்சி தலைவர் காரத்தி, முன்னாள் நகராட்சி தலைவர் பாண்டியன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் (பொ) தனபால் விஜயா, செவிலியர் கனகலதா, மருந்தாளுநர் சதாசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: