மாமல்லபுரம், பிப். 28: மாமல்லபுரத்தில் துணை ஜனாதிபாதி வெங்கையா நாயுடு, சிற்ப கல்லூரியில் திருவள்ளுவர் சிலையை இன்று திறந்து வைக்கிறார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மாமல்லபுரத்தில் உள்ள அரசு கட்டடக்கலை மற்றும் சிற்ப கலைக் கல்லூரியில் உள்ள சிற்பங்களை பார்வையிட நேற்று காலை வந்தார். அவருக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில், வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர், தனியார் விடுதியில் தங்கினார்.இன்று காலை 11 மணியளவில் அரசு கட்டடக்கலை மற்றும் சிற்ப கல்லூரியில், மாணவர்கள் கை வண்ணத்தில் செதுக்கி வைக்கப்பட்டுள்ள, 5 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் ஒவ்வொகு கட்டிடமாக சென்று, அங்குள்ள கற் சிற்பம், சுதைச் சிற்பம், மரச்சிற்பம், உலோக சிற்பம் ஆகியவற்றை பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.