புதுக்கோட்டை, பிப்.28: புதுக்கோட்டையில் ஆம்னி பேருந்துகளுக்கு தனியே பேருந்து நிலையத்து நிலையம், பயணிகளை இறக்கிவிட வரும் வாகனங்கள் நிறுத்துவத தனியே இடவசதியை ஏற்படுத்தி தரவேண்டும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை நகராட்சியில் கடந்த 1981ம் ஆண்டு புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் பெருகி வரும் சாலை போக்குவரத்தால் தனியார், அரசு பேருந்துகளின் இயக்கம் அதிகரித்தது. இதனால் இந்த பகுதியில் இருந்து ஆம்னி பேருந்துகள் அதிகரித்து விட்டது. இதன் காரணமாக பேருந்து நிலையத்துக்குள் இடநெருக்கடி ஏற்பட்டு உள்ளே நுழையும் பேருந்துகள் மிகவும் தாமதமாக வெளியேறும் நிலை ஏற்பட்டது.இந்நிலையில், பேருந்து நிலையத்தின் தரைப்பகுதிகள், வணிக வளாகங்கள் ஆகியவை சிதிலமடைந்தன. அதில், கான்கிரீட் தரைத்தளம் குண்டும் குழியுமாக மாறியது. இதனால் பொதுமக்களும், பயணிகளும் சிரமப்படும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து பல காலகட்டங்களில் கோடிக்காணக்கான ரூபாய் செயலவு செய்து புதிய பேருந்து நிலையம் புதிப்பிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. சில நேரங்கள் மராமத்து பணிகளும் நடைபெற்றது.இத்தகைய சூழலில், புதுக்கோட்டையிலிருந்து 200க்கும் மேற்பட்ட புறநகர் பேருந்துகள் சென்னை உள்பட பல்வேறு ஊர்களுக்கு இயங்கி வருகின்றன. திருச்சி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்திய பிறகு சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, ராமநாதபுரம் ஆகிய பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் திருச்சி விமானநிலையத்தை தேர்வு செய்கின்றனர்.இதனால் ராமேஸ்வரம், ராமநாதபுரம், தேவகோட்டை, காரைக்குடி, சிவகங்கை, பரமக்குடி, இளையான்குடி ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் 40க்கும் மேல்பட்ட ஆம்னி பேருந்துகள் சென்னைக்கும், சில பேருந்துகள் பெங்களூர், கோவைக்கும் புதுக்கோட்டை வழியாகச் சென்று வருகின்றன.