மன்னார்குடி, பிப்.26:வடுவூர் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி பைக் மீது மோதியதில் நெல் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ரூக்குமணிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் திரிசங்கு (58). நெல்வியாபாரி. இவருக்கு பவானி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். பவானி வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஊருக்கு வந்துள்ளார்.இந்நிலையில் நெல் வியாபாரி திரிசங்கு நேற்று முன்தினம் இரவு வடுவூர் சென்று விட்டு பைக்கில் மன்னார்குடிக்கு திரும்பி வந்தார். அப்போது எடமேலையூர் மெயின் ரோடு ராணித் தோப்பு அருகே திருத்துறைப்பூண்டியில் இருந்து வைக்கோல் பாரம் ஏற்றிக் கொண்டு கரூர் நோக்கி சென்ற டாரஸ் லாரி பைக் மீது மோதியது. இதில் திரிசங்கு பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்து கிடந்தார்.