தேசிய ரோல்பால் போட்டி செட்டிநாடு மாணவருக்கு தங்கம்

காரைக்குடி, பிப்.26: தேசிய அளவிலான ரோல் பால் போட்டியில் செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மாணவர் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.கொழும்பில் தேசிய அளவிலான ரோல் பால் சாம்பியன் ஷிப் போட்டி நடந்தது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில் இந்திய அணியும், கொழும்பு அணியும் மோதின. இதில் இந்திய அணி கொழும்பு அணியை வென்று தங்கப்பதக்கம் பெற்றது. இந்திய அணியில் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மாணவர் ராம் கோல் கீப்பராக விளையாடினார். வெற்றிபெற்ற மாணவரை பள்ளிக்குழும தலைவர் குமரேசன், துணை தலைவர் அருண், நிர்வாக இயக்குநர் சாந்திகுமரேசன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

Related Stories: