கார்-டிராக்டர் மோதல்

வாலிபர் பலி, 4 பேர் படுகாயம்மேலூர், பிப்.26: மேலூர் அருகே வைக்கோல் ஏற்ற சென்ற டிராக்டர் நான்கு வழிச்சாலையில் விபத்தில் சிக்கி ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர்.மேலூர் அருகே பூதமங்கலம் பொட்டப்பட்டியை சேர்ந்த சோலையப்பன் மகன் சுரேஷ்(34). இவருடன் சேர்ந்து அதே ஊரைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர்கள் வடிவேல், தர்மராஜ், கற்பகம், பிரபு ஆகியோர் நேற்று அதிகாலை டிராக்டரில் வைக்கோல் ஏற்றுவதற்காக மேலூர் நான்கு வழிச்சாலையில் சென்றுள்ளனர்.சத்தியபுரம் விலக்கு அருகே சென்றபோது, ஆரணியில் இருந்து மதுரையை நோக்கி சென்ற கார் டிராக்டர் மீது மோதியது. இதில் டிராக்டர் ஒரு பக்கமாக கவிழ்ந்ததில் 5 பேரும் படுகாயமடைந்தனர். 108 மூலம் இவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட, வழியிலேயே சுரேஷ் பலியானார். மற்ற நான்கு பேரும் மேலூர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வழக்குப்பதிவு செய்து மேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: