வாடிப்பட்டி, பிப்.26: வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் மருந்து மாத்திரைகள் வாங்க மணிக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டியதாக மாணிக்கம் எம்எல்ஏ.விடம் நோயாளிகள் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு கூடுதல் மேற்கூரைகள் அமைத்து தரப்படும் என மாணிக்கம் எம்.எல்.ஏ உறுதியளித்தார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் வழங்க எம்எல்ஏ மாணிக்கம் வந்தார். அங்கிருந்த நோயாளிகளிடம் எம்எல்ஏ மாணிக்கம் நலம் விசாரித்தார். அப்போது, டோக்கன் முறையில் மருந்துகள் வழங்குவதால் பல மணி நேரம் காத்துக் கிடக்க வேண்டியுள்ளதாகவும், காத்திருப்பதற்கு போதிய இடவசதியும் இல்லை என நோயாளிகள் புகார் தெரிவித்தனர்.