கோவை, பிப். 25: கோவையில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ராஜாமணி துவக்கி வைத்தார். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி, ேரஸ்கோர்ஸ் சாலையில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இப்பேரணியில் பாஸ்ட்புட் உணவை உண்ணாதே, பிளாஸ்டிக்கை ஒழிப்போம், பாதுகாப்பான உணவே ஆரோக்கியமான வாழ்வு, உணவு பாதுகாப்பு உரிமம் பெறுவீர் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். இந்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன், மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.