கடலூர், பிப். 25: கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கை: என்எல்சி நிர்வாகம் ஒப்பந்தம் மற்றும் இன்கோசர்வ் தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும். என்எல்சி நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலம், வீடு கொடுத்தோர், வாரிசுகள் மற்றும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒப்பந்தம் மற்றும் இன்கோசர்வ் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். கடந்த ஊதிய மற்றும் ஒப்பந்த காலம் நிறைவடைய உள்ள நிலையில், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை என்எல்சி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளாத நிலையில், தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.