மூணாறு அருகே வீட்டில் கஞ்சா வளர்த்தவர் கைது

மூணாறு, பிப். 21: மூணாறு அருகே உள்ள கட்டப்பனையைச் சேர்ந்தவர் மனு தோமஸ். இவர் வீட்டின் படுக்கை அறை அருகே, கஞ்சா செடிகளை வளர்த்து, கல்லூரி மாணவர்களுக்கு விற்பதாக, அப்பகுதி பொதுமக்கள் போதை தடுப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், போதை தடுப்பு போலீசார் பினு, ராஜேந்திரன், மத்தேயு, பிஜூ ஆகியோர் மனு தோமஸ் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதில், அவரது வீட்டில் இருந்த கஞ்சா செடிகளை அழித்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில், ‘பிடிபட்ட மனு தோமஸ் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கிராம் கஞ்சா ரூ.1000க்கு விற்றது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

Related Stories: