சென்னை, பிப்.20: சோழிங்நல்லூரில் தீயணைப்பு நிலையம் மற்றும் அரசு பன்நோக்கு மருத்துவமனை அமைக்க வேண்டும் என திமுக உறுப்பனர் அரவிந்த் ரமேஷ் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார். சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் நேற்று உறுப்பினர்கள் 15 நிமிடங்கள் பேச வேண்டும் என சபாநாயகர் தனபால் கூறினார். அதன்பேரில், அதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் 15 நிமிடங்களுக்குள் பேசி முடித்து விட்டனர்.ஆனால், சோழிங்கநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ அரவிந்த் சோழிங்கநல்லூர் தொகுதி 6.6 லட்சம் வாக்காளர்களை கொண்டது. தமிழகத்திலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட பெரிய தொகுதி .இது 3 சட்டமன்ற தொகுதிகளை அடக்கியுள்ளது. எனவே, இந்த தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து பேச சபாநாயகர் 40 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும் என்றார்..சபாநாயகர் தனபால்: ஒவ்வொரு தொகுதிக்கும் 5 நிமிடங்கள் வீதம் 15 நிமிடங்கள் ஒதுக்கப்படுகிறது. அதற்குள் பேசி முடிக்க வேண்டும் என்றார்.அரவிந்த் ரமேஷ்: ஓம்எம்ஆர் மற்றும் இசிஆர் சாலையை இணைக்கும் 6 பாலங்களை அகலப்படுத்த வேண்டும். உள்ளகரம் புழுதிவாக்கத்தில் புதிய துணை மின்நிலையம் அமைக்க வேண்டும்.