வருஷநாடு, பிப்.20: கடமலை மயிலை ஒன்றியத்தில் இலவம் பஞ்சு பறிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடமலை மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு வருசநாடு, மயிலாடும்பாறை, தும்மக்குண்டு, சிங்கராஜபுரம், தர்மராஜபுரம், தங்கம்மாள்புரம், உப்புத்துறை, குமணன்தொழு, கோம்பைத்தொழு உள்ளிட்ட கிராமங்களில் இலவம்பஞ்சு சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் காலை மாலை இரண்டு வேளைகளில் கூலித் தொழிலாளிகள், விவசாயிகள் இலவம்பஞ்சு பறிக்கும் பணிகளில் தீவிரமாக களம் இறங்கியுள்ளார்கள். தற்பொழுது இலவம் பஞ்சு கிலோ ஒன்றுக்கு ரூ.110 லிருந்து ரூ.112 வரை விலை போய்க்கொண்டிருக்கிறது. இந்த இலவம் பஞ்சு வாங்குவதற்காக மொத்த வியாபாரிகளும் சில்லரை வியாபாரிகளும் கடமலை மயிலை ஒன்றியத்தில் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளனர்.