மதுரை, பிப். 20: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, நாளை(பிப்.21) இரவு முழுவதும் பக்தர்களின் வசதிக்காக நடை திறக்கப்பட்டு இருக்கும். எனவே, விடிய, விடிய பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என கோயில் இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடந்து வருகிறது. தை தெப்பத்திருவிழா முடிந்து, தற்போது மாசி திருவிழா நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து மகா சிவராத்திரி உற்சவம் நாளை (21ம்தேதி) நடக்கிறது. அன்றிரவு நடை திறக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் ஆராதனை பிப். 22ம் தேதி அதிகாலை வரை நடைபெறும்.