நாய் தொல்லை அதிகரிப்பு

மதுரை, பிப்.20: மதுரை கோரிப்பாளையம் ஜம்புரோபுரம் பகுதியில் காய்கறி மற்றும் மீன், இறைச்சி மார்க்கெட் உள்ளது. இங்கிருந்து வெளியேறும் இறைச்சி, மீன் கழிவுகளை வெளியில் கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் இறைச்சிக்கழிவுகளை தின்பதற்காக கூடும் நாய்களால் அப்பகுதி மக்களுக்கு பெரும் தொல்லை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் நாய்களைக் கட்டுப்படுத்துவதுடன், கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: