கடலூர், பிப். 19: கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (70). மனநலம் பாதித்த இவர் சென்னை வியாசர்பாடியில் உள்ள அவரது மகள் நிலா வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 16ம் தேதி வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே காசிமேடு பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார் அங்கு தவித்துக்கொண்டிருந்த ஆறுமுகத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஏதும் பேசாமல் தனது ஊர் பண்ருட்டி, பெயர் ஆறுமுகம் என்று மட்டும் கூறியுள்ளார். இதையடுத்து காசிமேடு போலீசார் கடலூர் மாவட்ட எஸ்பிக்கு தகவல் தெரிவித்தனர்.