கடலூர், பிப். 19: சிதம்பரம் ஓமக்குளம் பகுதி மக்கள் சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் தலைமையில் கடலூரில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: ஓமக்குளம் மேல்கரை பகுதியில் வசித்து வந்த 90 சதவீத ஆதிதிராவிட இனத்தை சார்ந்த மக்களாகிய நாங்கள் 60 ஆண்டுகாலமாக மூன்று தலைமுறையாக குடியிருந்து வந்த வீட்டை இடித்து தள்ளிவிட்டனர். எனவே அரசு ஆணையின்படி டோக்கன் என்ற பெயரில் மாற்று இடம் வழங்குவதாக கூறினார்கள். கடந்த டிசம்பர் 2ம்தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுதொடர்பாக மனு வழங்கப்பட்டுள்ளது.