ஓய்வு பெற்றோர் ஆர்ப்பாட்டம்

சேலம், பிப்.19: சேலத்தில் கோரிக்கைளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சேலம் மண்டல அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, ‘‘சம்பளத்தில் பிடித்தம் செய்த சமூக பாதுகாப்பு நிதியை வழங்க வேண்டும். சிக்கன நாணய சங்கத்திற்கு வழங்க வேண்டிய சேமிப்பு கடன் தவனை, பிடித்தம் செய்த தொகையை வழங்க வேண்டும். சென்னை, மதுரை கோட்டத்தில் நடைபெறும் ஓய்வூதியர்களின் குறைதீர்க்கும் கூட்டம் நடப்பது போல் சேலம் கோட்டத்திலும் நடைபெற வேண்டும்’’ என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories: