நாமக்கல் மேற்பார்வை அலுவலகம் முன் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், பிப்.19: நாமக்கல் மேற்பார்வை அலுவலகம் முன், மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல்லில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை தலைவர் குப்புசாமி தலைமை வகித்தார். மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருபவர்களை நிரந்தரம் செய்யவேண்டும். பணி நியமன தடை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் கள உதவியாளராக பணி நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மின்வாரிய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: