மன்னார்குடி, பிப்.19: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் வரும் 22 ம் தேதி நடைபெற உள்ள தேசம் காப்போம் பேரணி குறித்த பிரசார கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது.பாஜக அரசின் குடியுரிமை திருத்த சட்டமும் (சிஏஏ), என்.பி.ஆர், என்ஆர்சி நடவடிக்கைகளும் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல அனைத்துத் தரப்பு மக்களு க்குமே ஆபத்தானவை. குடியுரிமை திருத்த சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், 2020 ஏப்ரலில் துவங்கவுள்ள தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும், தேசிய குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி) திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி தலைமையில் திருச்சியில் வரும் 22 ம் தேதி தேசம் காப்போம் பேரணி நடைபெற உள்ளது.