காஞ்சிபுரம், பிப்.19: விவசாயிகளுக்கான விவசாய கடன் பெறுவதற்கான அட்டை சிறப்பு முகாம் நடக்க உள்ளதாக , காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அசோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு. பிரதமரின் கிசான் திட்ட விவசாயிகள் மற்றும் இதர விவசாயிகள் விவசாய கடன் அட்டை பெற்று பயனடைய அனைத்து வங்கி கிளைகளிலும் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று விவசாய கடன் அட்டை பெற்று பயனடையலாம்.பிரதமரின் கவுரவ உதவித்தொகை திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் மற்றும் இதர விவசாயிகளுக்கு கடந்த 14ம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கப்படும். இந்த கடன் அட்டை மூலம் அதிகபட்ச கடன் தொகையாக 1.6 லட்சம் ஜாமீன் இல்லாமல் பெறலாம்.