கன்னியாகுமரி, பிப்.19: கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகு டிக்கெட் ஆன் லைன் மூலம் விற்பனை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்தார். கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரையில் மத்திய அரசின் சுவதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் ₹3.81 கோடி செலவில் 2வது கட்டமாக வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. சூரிய உதயத்தை பார்க்கும் இடத்தை அழகு படுத்துதல், கடலில் படித்துறை அமைத்தல் போன்ற பணிகள் செய்யப்படுகின்றன. இந்த பணிகளை நேற்று கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நேரில் ஆய்வு செய்தார்.அப்போது அலைகள் அதிகம் எழுந்துவரும் பாறை பகுதிகளிலும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் சனல்குமார், உதவி பொறியாளர் இர்வின் ஜெயராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ்,கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் நவீன் ஆகியோர் உடன் இருந்தனர்.கோடை விடுமுறைக்கு முன்பு பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் கலெக்டரிடம் வியாபாரிகள் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கன்னியாகுமரி கடற்கரையில் செயற்கையாக போடப்பட்டுள்ள கருங்கற்கள் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக உள்ளன. எனவே அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது: