பிச்சனூரில் உள்ள தைலமர தோப்பில் பயங்கர தீ

தா.பழூர், பிப். 18: பிச்சனூர் கிராமத்தில் உள்ள தைலமர தோப்பில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பிச்சனூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான வனப்பகுதி உள்ளது. இதில் உள்ள தைல மரங்கள் தீ பிடித்து எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.

Related Stories: