கோவை, பிப் 18: கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள கலிங்கா தெருவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள சாக்கடைகள் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக தூர்வாரப்படவில்லை. இதனால் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியில்லாமல், நிரம்பி தெருவில் குளம்போல தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி பொது மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.