தென்தாமரைக்குளம், பிப்.18 :தாணுலிங்க நாடாரின், பிறந்தநாள் விழாவையொட்டி நாகர்கோவிலில் நேற்று இந்து முன்னணி சார்பில் பைக் ஊர்வலம் நடைபெற்றது.இந்து முன்னணி நிறுவன தலைவர் தாணுலிங்க நாடாரின் 105 வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்ட இந்து முன்னணி சார்பில் நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து தாணுலிங்க நாடார் நினைவிடம் அமைந்துள்ள பொற்றையடி வரை பைக் ஊர்வலம் நடந்தது. இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்து முன்னணி மாநில பொது செயலாளர் அரசு ராஜா கொடியேற்றி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதம், இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன், மாவட்ட பொது செயலாளர் ஆர்.கே. கண்ணன், நெல்லை கோட்ட தலைவர் தங்க மனோகர், கோட்ட செயலாளர் சக்திவேலன், மாநில பேச்சாளர் வழக்கறிஞர் அசோகன், மாவட்ட செயலாளர் நம்பிராஜன், மாநகர பொது செயலாளர் மகாராஜா, பா.ஜ. மாவட்ட துணைத்தலைவர் முத்துராமன், பா.ஜ. நிர்வாகிகள் தேவ், ராஜன், மீனாதேவ், உமாரதி, நாகராஜன், வி.எச்பி. தென் தமிழக மாநில இணை செயலாளர் காளியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.