நாகர்கோவில், பிப்.18 : நாகர்கோவிலில் ரயிலில் ஏற்பட்ட மோதலில் குமரி வாலிபரை கத்தியால் குத்திய, வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.களியக்காவிளை பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர், நாகப்பட்டிணத்தில் நடைபெறும், ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள நேற்று காலை குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில், திருச்சிக்கு சென்று கொண்டு இருந்தார். குழித்துறை ரயில் நிலையத்தில் இருந்து இவர் ரயில் ஏறினார். காலை 5.45 மணியளவில் ரயில், நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்தது. நேற்று வாரத்தின் முதல்நாள் என்பதால், திருநெல்வேலி, மதுரை, திருச்சிக்கு செல்ல இந்த ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது இந்த ரயிலில் ஏறிய, அசாம் மாநிலத்தை சேர்ந்த கார்த்தி தாஸ் (41) என்பவருக்கும், ராஜேசுக்கும் தகராறு ஏற்பட்டது.