நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை

நாகர்கோவில், ஏப். 23: நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவின் பேரில் நாகர்கோவிலில் நாய்கள் பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று மாநகர நல அலுவலர் டாக்டர் ராம்குமார் மேற்பார்வையில் சுகாதார அலுவலர் முருகன் தலைமையில் சூப்பர்வைசர் அபின் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர் வீரபாகு ஆகியோர் கொண்ட குழுவினர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மறவன் குடியிருப்பு, அனாதை மடம் , இந்து காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிந்த 13 நாய்களை பிடித்து தடுப்பூசி போடப்பட்டு கருத்தடை செய்யப்பட்டது. இந்த பணியானது தொடர்ந்து மாநகரம் முழுவதும் நடைபெறும் என்று மாநகர நல அலுவலர் டாக்டர் ராம்குமார் தெரிவித்தார்.

The post நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை appeared first on Dinakaran.

Related Stories: