நாமக்கல், பிப்.17: தூக்தூக்குடியில் இருந்து லாரி ஒன்று 7 டன் உப்பு ஏற்றி கொண்டு, சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை வீராசானூர் மகேந்திரமங்கலத்தைச் சேர்ந்த சீனிவாசன்(32) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் கிளீனர் மதியழகன் உடன் வந்துள்ளார். நேற்று காலை 9 மணியளவில் நாமக்கல் மாவட்டம் மதுரை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்சந்தை அருகே உள்ள தாத்தையங்கார்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, லாரியின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது.